பிஎஃப் (PF) கணக்கில் உள்ள பணத்தை பரிமாற்றம் செய்வது எளிது – ஊழியர்களுக்கு நற்செய்தி

0

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி ஆணையம் (EPFO) வருங்கால வைப்பு நிதியில் (PF) பரிமாற்றம் செய்யும் முறையை எளிமையாக்கியுள்ளது. இதன் மூலம் ஊழியர்கள் ஒரு கம்பெனியில் இருந்து வெளியேறும் தேதியை தாங்களே பதிவு செய்து கொள்ளும் முறையும் கொண்டுவரப்பட்டுள்ளது. இது PF கணக்கு வைத்திருக்கும் ஊழியர்களுக்கு ஒரு நற்செய்தி ஆகும். ஏனென்றால் முன்பு நிறுவனத்தில் இருந்து வெளியேறும் தேதியானது அந்தெந்த நிறுவன முதலாளிகள் ஆல் மட்டுமே பதிவிடக் கூடிய ஒன்றாக இருந்தது.

Image result for whatsapp logo

வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்

என்னென்ன மாற்றங்கள்??

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி ஆணையத்தில் கணக்கு வைத்திருக்கும் ஊழியர்கள் தாங்கள் நிறுவனத்தில் இருந்து வெளியேறும் தேதியை குறிப்பிடுவது கட்டாயமான ஒன்றாகும். அவ்வாறு பதிவு செய்தால் மட்டுமே ஊழியர்கள் அந்த நிறுவனத்தின் பணியில் இருந்து விலகும் போது அந்த கணக்கில் உள்ள பணத்தை பரிமாற்றம் செய்யவோ அல்லது அடுத்த நிறுவனத்துடன் இணைத்து தொடரவோ முடியும்.

Image result for telegram logo

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

Image result for youtube logo

யூடூப் சேனலில் தகவல்களைப் பெற இங்கே கிளிக்செய்யவும்

தேதியை மாற்றுவது எப்படி??

  1. யூனிவர்சல் போர்டல் கணக்கு எண்னை (UAN) பயன்படுத்தி லாக் இன் செய்ய வேண்டும்.
  2. மேனேஜ் (MANAGE) ஆப்டின் உள் செல்ல வேண்டும்.
  3. மார்க் எக்ஸிட் (MARK EXIT) ஆப்டின் ஜக் கிளிக் செய்ய வேண்டும்.
  4. செலக்ட் எம்பிளாய்மென்ட் (SELECT EMPLOYMENT) ஆப்டின் இல் முந்தைய கணக்கு எண்னை தேர்வு செய்து ஊழியர்கள் வெளியேறுவதற்கான காரணத்தையும் குறிப்பிட வேண்டும்.
  5. உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு (OTP) வரும், அந்த ஒடிபியை அளித்து நீங்கள் உங்கள் பி.எஃப் பணத்தை எளிதாக பரிமாற்றம் செய்யவும், திரும்ப பெறவும் முடியும்.
To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here