நீட் தேர்வில் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை 17% குறைவு – என்ன காரணம்??

0

இந்தியாவில் மருத்துவ படிப்பில் சேர நுழைவுத் தேர்வாக நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் 2020ம் ஆண்டிற்கான நீட் தேர்வில் விண்ணப்பித்துள்ள தமிழக மாணவர்களின் எண்ணிக்கை சென்ற ஆண்டை விட 17% குறைந்துள்ளது.

நீட் தேர்வில் பிரச்சனைகள்

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடைபெற்ற நிகழ்வு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும் தமிழக மாணவர்கள் சிலருக்கு சென்ற முறை தெலுங்கானா, ஆந்திரா ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிகழ்வும் பெரிதளவில் பாதித்தது. மேலும் நீட் தேர்வினால் அனிதா போன்ற 6 மாணவர்களும் தற்கொலை செய்து கொண்டதும் மிகப்பெரிய பிரச்சனையாக இருந்தது.

Image result for whatsapp logo

வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்

இந்த ஆண்டு 17% சரிவு

சென்ற ஆண்டு நீட் தேர்வினை தமிழக மாணவர்கள் 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் எழுதினர். ஆனால் இந்த ஆண்டு 1 லட்சத்து 17 ஆயிரம் மாணவர்கள் மட்டுமே நீட் தேர்வெழுத விண்ணப்பித்துள்ளனர். இது 17% மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதையும், மாணவர்களுக்கு இத்தேர்வின் மீது ஆர்வம் குறைந்துள்ளதையும் காட்டுகிறது.

Image result for telegram logo

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

நீட் தேர்வு தமிழகத்தில் இந்த வருடம் வரும் மே 3ம் தேதி நடக்கிறது. இதற்கான விண்ணப்பிக்கும் நேரமும் ஜனவரி 1 முடிவடைந்துள்ளது.

என்ன காரணம்??

தமிழகத்தில் இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு இலவச பயிற்சி மையம் இல்லை என அரசு அறிவித்துள்ளது. மேலும் பணம் கட்டி தனியார் பயிற்சி மையங்களில் படிப்பதற்கு வசதி இல்லாமல் இருப்பதும், தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு மேற்கொள்ளப்படும் கடுமையான உடை சோதனைகளும் அவர்களை உளவியல் ரீதியாக பாதிக்கும் என்பதும் முக்கிய காரணமாக உள்ளது.

நீட் தேர்வு – 16 லட்சம் பேர் விண்ணப்பம்

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here