தமிழ்நாடு மற்றும் பல்வேறு மாநிலங்களில் அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநில அரசுகள் புதிய தேசிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தி வருகின்றனர்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இதன் காரணமாக புதிய தேசிய ஓய்வூதிய திட்டத்தில் திருத்தம் செய்வதற்காக மத்திய நிதித்துறை செயலாளர் தலைமையில் குழு ஓன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குழுவில் உறுப்பினராக உள்ள பென்ஷன் ஆணைய தலைவர் தீபக் மொஹந்தி முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். அதாவது “தேசிய ஓய்வூதிய திட்டத்தின் வருமானம் பங்கு சந்தையில் முதலீடு செய்வதால் நிலையான ஓய்வூதியம் கிடைக்காது என பலரும் தெரிவிக்கின்றனர். ஆனால் இத்திட்டம் மூலம் மத்திய அரசு ஊழியர்களுக்கு 9.5 சதவீதமும், மாநில அரசு ஊழியர்களுக்கு 9.4 சதவீதமும் வருமானம் கிடைத்துள்ளது.” என தகவல் தெரிவித்துள்ளார்.
முதல் படத்திலே நோ சொன்ன இளையராஜா.., கண் கலங்கி பேசிய பிரபல இயக்குனர்!
இந்த தகவல் மத்திய மாநில அரசு ஊழியர்களிடையே வரவேற்பை பெறுமா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.