அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி உயர்வுகளை மத்திய மாநில அரசுகள் அறிவித்து வருகிறது. இதன்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி 38 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக கடந்த மார்ச் மாதம் உயர்த்தப்பட்டது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதைத்தொடர்ந்து தமிழ்நாடு, கர்நாடகா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநில அரசும் தங்களது ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அறிவித்து வருகிறது. இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு வருகிற செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் அடுத்த அகவிலைப்படி 3 முதல் 4 சதவீதம் வரை உயரும் என AICPI தரவுகள் தெரிவித்து வருகிறது.
அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? வெளியான பகீர் தகவல்!!!
இந்த அறிவிப்பு எப்போது வெளியானாலும் ஜூலை மாதம் முதலே அகவிலைப்படி உயர்த்தப்படும். இதன்படி அடிப்படை மாதச் ஊதியம் ரூ.18,000/- வாங்கும் ஒருவருக்கு 46 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டால் ரூ.8,280 வரை வருமானம் கூடுதலாக கிடைக்கும். ஆண்டுக்கு ரூ.1,68,636 வரை ஊதிய உயர்வு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.