பிரிட்டனில் தற்போது புதிதாக உருமாறிய கொரோனா பரவி வருகிறது. தற்போது உருமாறிய கொரோனா இந்தியாவையும் தாக்கியுள்ளது. இந்தியாவில் உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று மத்திய குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உருமாறிய கொரோனா:
தற்போது உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை கண்டுபிடித்து அதனை மக்களுக்கு வழங்கி வருகின்றனர். மேலும் கொரோனாவின் தாக்கம் உலக நாடுகளில் குறைந்து வருகிறது. கடந்த ஆண்டு இறுதியில் ஓர் அதிர்ச்சியான தகவல் வெளியாகியது. அது என்னவென்றால் இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் உருமாறி புதுவகை கொரோனவாக பரவி வருகிறது. இது முந்தய கொரோன வைரஸை விட 70 சதவீதம் வீரியம் மிகுந்துள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
மேலும் மனித உயிர்களுக்கும் ஆபத்து ஏற்படுத்தும் தன்மையை உடையது. இந்த உருமாறிய கொரோனா வைரஸ் டென்மார்க், நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, இத்தாலி, பிரான்ஸ் போன்ற உலக நாடுகளிலும் பரவி வருகிறது. இந்தியாவிலும் இந்த உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதன் அடிப்படையில் பிரிட்டனில் இருந்து இந்தியா வந்தவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனையை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஒருநாள் போட்டி தரவரிசை – விராட் மற்றும் ரோஹித் தொடர்ந்து முன்னிலை!!
தற்போது வரை மொத்தம் 165 பேர் இந்தியாவில் உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் டெல்லியில் 83 பேரும் புனேவில் 44 பேரும் உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளது. உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அந்தந்த மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிப்படுத்தியுள்ளனர்.