தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்.., இனி இந்த பிரச்சனை இருக்காது., கடை ஊழியர்களுக்கு பறந்த  உத்தரவு!!!

0
தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் பல சலுகைகளை தமிழக அரசு செய்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் பொது மக்களுக்கு ஏதாவது புகார்கள் இருந்தால் அதை உடனடியாக தெரிவிக்க இலவச எண்ணும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதம் தோறும் குறைந்த விலையில் அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை, சர்க்கரை போன்ற பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால் இந்த அனைத்து பொருட்களையும் ரேஷன் கடை ஊழியர்கள் ஒரே நேரத்தில் வழங்காமல் பொதுமக்களை தினமும் கடைக்கு வர வைக்கின்றனர். இந்நிலையில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு கூட்டுறவு துறை அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதாவது இனி வரும் நாட்களில் வெயில் காலம் வேறு அதிகரித்து விட்டதால் பொதுமக்களுக்கு ஒரே தவணையில் அனைத்து பொருட்களையும் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here