புதுச்சேரி கொடூர சம்பவம்.. சிறுமியின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிவாரணம்.. முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு!!

0

தற்போது நம் நாட்டில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை என குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதற்காக அரசு மிக கடுமையான சட்டங்களை கொண்டு வந்தாலும் இவை அனைத்தும் குறைந்த பாடில்லை என்றே சொல்லலாம். இதனை தடுக்க அரசு பல்வேறு தரப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. ஆனால் அவை அனைத்தும் பலனில்லாமல் தான் போகிறது. அந்த வகையில் புதுச்சேரியில் ஓர் அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்.., இனி இந்த பிரச்சனை இருக்காது., கடை ஊழியர்களுக்கு பறந்த  உத்தரவு!!!

அதாவது புதுச்சேரியில் கடந்த 2ம் தேதி காணாமல் போன ஆர்த்தி என்கிற 9 வயது சிறுமி கழிவுநீர் வாய்க்காலில் சாக்குமூட்டையில் படுகொலை செய்யப்பட்டு இருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை தரப்பட்டது பிரேத பரிசோதனையில் உறுதியானதாக தகவல் வெளிவந்துள்ளது.

இதை அடுத்து பெற்றோர்கள், உறவினர்கள் குற்றவாளிகளை பிடித்து எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என மறியலில் ஈடுபட்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பிறகு சுமுக பேச்சு வார்த்தைக்கு பிறகு  படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவித்து முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here