தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களே.., இதற்கு கட்டணம் கிடையாது.., பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!!

0
தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களே.., இதற்கு கட்டணம் கிடையாது.., பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!!
தமிழகத்தில் இப்போது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11, 12 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து வரும் மார்ச் 24ஆம் தேதி முதல் 10ம் வகுப்பு பொது தேர்வு துவங்க உள்ளது. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படித்து பொதுத் தேர்வில் தோல்வியடையும் மாணவர்கள் மீண்டும் தேர்வுக்கு விண்ணப்பிப்பது வழக்கம்.
அப்படி அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படித்து தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் தட்கல் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தால் சிறப்பு கட்டணமான ரூபாய் ஆயிரம் கிடையாது என பள்ளி கல்வித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார் .மேலும் இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அளவை 7 நாட்களில் இருந்து 15 நாட்களாக நீட்டித்து உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here