2024-25 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் பிப்ரவரி மாதம் 1ம் தேதி நடக்க உள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இதனால் மக்களுக்கு பயனுள்ள வகையில் பல அறிவிப்புகள் வெளியாகலாம் என அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். மேலும் நடப்பு ஆண்டு உணவுப் பொருட்கள், சிலிண்டர், எண்ணெய், பருப்பு வகைகள் போன்ற அனைத்து வீட்டு உபயோகப் பொருட்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்தது.
இதனால் மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்த விலை உயர்வுக்கு ஒரு முடிவு கிடைக்கும் என எதிர்பார்ப்பில் உள்ளனர். இதைத்தொடர்ந்து இளைஞர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் ஒரு செய்தியும் வெளியாக உள்ளது. அதாவது நாட்டில் பல லட்சம் இளைஞர்கள் வேலை இல்லாமல் திண்டாடி வருகின்றனர். இதனால் இந்த பட்ஜெட் தாக்கல் முடிவில் பல அரசு காலி பணியிடங்கள் வெளியிடலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்த பட்ஜெட் கூட்டுத்தொடரின் முடிவுகளை எதிர்நோக்கி மக்கள் பலரும் காத்துக் கொண்டுள்ளனர்.