அண்மையில் தென் தமிழக மாவட்டங்களில் பெய்த தொடர் கனமழையால், நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் பெருமளவு சேதம் ஏற்பட்டது. குறிப்பாக திருநெல்வேலியில் உள்ள பல குடியிருப்புகளும் மழை வெள்ளத்தால் சேதமானதோடு, பலரும் தங்களது வாழ்வாதாரத்தையும் இழந்து தவிக்கின்றனர். இதனை கருத்தில் கொண்டு தகுந்த நிவாரணங்களை வழங்க மாவட்ட மற்றும் மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அந்த வகையில் நெல்லை மாவட்ட நிர்வாகம் ஆய்வு மேற்கொண்டதில் 1,064 குடிசை வீடுகள் முற்றிலும் இடிந்து பாதிக்கப்பட்டு, வெள்ளத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கணக்கிட்டு உள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்க மாவட்ட நிர்வாகம் சார்பில் ரூ.2.87 கோடி ஒதுக்கி உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
11 வாரத்துக்கு இத்தனை லட்சமா?? சரவண விக்ரமுக்கு பிக்பாஸ் கொடுத்த சம்பளம்.. முழு விவரம் உள்ளே!!