அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டுதோறும் இருமுறை அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் அண்மையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி 42 சதவீதத்திலிருந்து 46 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இந்த சூழலில் மக்களவை தேர்தலை கருத்தில் கொண்டு புத்தாண்டு பரிசாக 2024 ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Enewz Tamil WhatsApp Channel
அதேபோல் மத்திய அரசு ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கையான ஃபிட்மெண்ட் பொருத்துதல் காரணியை 2.60 மடங்குகளில் இருந்து 3.0 மடங்காக அதிகரிக்க திட்டமிட்டு வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. அப்படி அதிகாரபூர்வமாக தெரிவிக்கும் பட்சத்தில் ஊழியர்களுக்கு, எதிர்பார்க்காத வகையில் ஊதிய உயர்வு இருக்கும் என நம்பப்படுகிறது.