நாட்டில் தற்போது கொரோனா நோய்த்தொற்றினை குறைப்பதற்கு ஒரே தீர்வு தடுப்பூசி தான் என்று கூறி வரும் நிலையில் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை செலுத்திக்கொண்டார்.
நயன்தாரா:
கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலையில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் அனைவரும் கட்டாயமாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும் இதில் இருந்து மீள்வதற்கு தடுப்பூசி தான் ஒரே வழி என்றும் மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது தடுப்பூசி பணிகள் தீவிரபடுத்தப்பட்டு வருகிறது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
மேலும் திரை உலகினர் பலரும் தடுப்பூசியை செலுத்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவை சேர்ந்த பல சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என அனைவரும் தடுப்பூசி செலுத்தி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தடுப்பூசி செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
‘இனி அந்த மாதிரி தான் நடிக்க போறேன்’ – வெள்ளித்திரையில் நயன்தாராவின் புதிய அவதாரம்!!
தற்போது அந்த வகையில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா தனியார் மருத்துவமனையில் தடுப்பூசியை செலுத்தியுள்ளார். இவரை தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவனும் தடுப்பூசியை செலுத்திக்கொண்டார். தற்போது இவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்ட புகைப்படம் இணையத்தில் காட்டுத்தீயாக பரவி வருகிறது.