தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா தற்போது புதிய அவதாரம் ஒன்றை எடுத்துள்ளாராம். தற்போது அதுகுறித்த தகவல் வெளியாகியுள்ளது.
நயன்தாரா:
தமிழ் சினிமாவில் பல ஹிட் மற்றும் ப்ளாக்பஸ்டர் படங்களை கொடுத்தவர் தான் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா. இவர் தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். மேலும் ஓர் பெரிய நடிகருக்கு எவ்வளவு ரசிகர்கள் பட்டாளம் இருப்பார்களோ அந்த அளவிற்கு இவருக்கும், ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் பேமஸாக இருக்கிறார் நயன்தாரா.
இவர் தற்போது ரஜினியின் அண்ணாத்த, விஜய் சேதுபதியின் காத்து வாக்குல இரண்டு காதல் ஆகிய படங்களில் செம பிசியாக இருந்து வருகிறார். இவர் முதன்முதலாக துணிச்சலுடன் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படத்தில் நடித்தார். அந்த படம் தான் அறம். இந்த படம் இவர் எதிர்பார்த்ததை விட அதிக வரவேற்பை பெற்று பல விருதுகளை அள்ளி கொடுத்தது.
தற்போது அந்த ஸ்டைலுக்கு திரும்புகிறார் நயன்தாரா. மீண்டும் இவர் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களை நடிக்க முடிவு செய்துள்ளதாகவும் அதற்காக இயக்குனர்களிடம் கதைகளை கேட்டு வருவதாகவும் சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது. தற்போது இந்த தகவலினால் லேடி சூப்பர் ஸ்டாரின் படத்திற்காக ரசிகர்கள் தவமிருந்து காத்து வருகின்றனர்.