கோலிவுட் திரையில் சூப்பர் ஸ்டார் என்ற புகழுடன் ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா. இதுவரை தென்னிந்திய திரைப்படங்களில் மட்டும் நடித்து வந்தவர் ஜவான் படத்தில் நடித்து பாலிவுட் திரைக்குள் என்ட்ரி கொடுத்துள்ளார். டிசம்பர் 1 ஆம் தேதி திரைக்கு வந்த அன்னபூரணி திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் சினிமாவை தாண்டி அழகு சாதனப் பொருட்கள் உள்ளிட்ட தொழில் நிறுவனங்களை தொடங்கியுள்ளார்.
இப்படி இருக்கையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை வேளச்சேரி மக்களுக்கு தன்னால் முடிந்த நிவாரண பொருட்களை இலவசமாக வழங்கியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் இணையத்தில் வெளியான நிலையில் நயன்தாராவை நெட்டிசன்கள் தாக்கி பேசி வருகின்றனர். அதாவது நயன்தாரா அண்மையில் தொடங்கி இருந்த என்கின்ற சானிட்டரி நாப்கின்கள் பெண்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. மேலும் femi9 சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்துங்கள் என அந்த வீடியோவின் இறுதியில் பெண்கள் சேர்ந்து கூறுவது போன்ற காட்சிகள் அமைந்துள்ளது. இப்படி நயனின் நிறுவனத்தை விளம்பரப்படுத்தும் விதமாக அந்த வீடியோவின் இருப்பதை கண்ட நெட்டிசன்கள் இதுல கூட விளம்பரமா என பேசி வருகின்றனர்.
Enewz Tamil WhatsApp Channel
View this post on Instagram