ஆசிரியர் தினமான இன்று தேசிய அளவில் சிறந்த ஆசிரியர்களுக்கான விருதுகளை ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் காணொளி காட்சி வாயிலாக வழங்கினார்.
தேசிய ஆசிரியர் தினம்:
இன்று முன்னாள் ஜனாதிபதியான ராதாகிருஷ்ணன் பிறந்தநாளை முன்னிட்டு ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் தேசிய அளவில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு “தேசிய நல்லாசிரியர் விருது” ஆண்டுதோறும் மத்திய அரசால் வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு கொரோனா பொது முடக்கம் காரணமாக ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் தேசிய அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு விருதினை காணொளி காட்சி வாயிலாக வழங்கினார்.
இந்த ஆண்டு விழா:
இந்த ஆண்டு 47 ஆசிரியர்கள் தேசிய அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த விழா ஜனாதிபதி தலைமையில் டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. இந்த விருது பெற்றவர்களில் 18 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 2 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.
मैं पुरस्कार विजेताओं को बधाई देता हूं और बच्चों को शिक्षित बनाने में उनकी कड़ी मेहनत, समर्पण और प्रतिबद्धता की सराहना करता हूं। मैं अपने देश में शिक्षक समुदाय के सभी सदस्यों को अपनी हार्दिक शुभकामनाएं देता हूं। pic.twitter.com/ixcUR67l11
— President of India (@rashtrapatibhvn) September 5, 2020
சென்னை அசோக்நகரில் உள்ள மகளிர் மேல்நிலை பள்ளி ஆசிரியர் சரஸ்வதி மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் பகுதியில் இருக்கும் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் திலிப் தமிழகத்தை சேர்ந்த விருது பெற்ற ஆசிரியர்கள்.