சிம்பு நடித்த பத்து தல இன்று தியேட்டரில் வெளியான நிலையில், படத்தை பார்க்க டிக்கெட் இருந்தும் நரிக்குறவர் இன மக்களை உள்ளே விடாத ரோகிணி தியேட்டர் மீது ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பத்து தல:
தமிழ் சினிமாவில் பாடகர், பாடலாசிரியர், இயக்குநர் மற்றும் நடிகர் என எல்லா துறையிலும் சிறந்து விளங்குபவர் தான் நடிகர் சிம்பு. தற்போது இவர் நடித்த பத்து தல திரைப்படம் திரையரங்கில் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது. மேலும் சென்னையில் பெரிய தியேட்டரான ரோகிணி திரையரங்கில் முதல் நாள் முழுவதும் ஹவுஸ்புல் என்று அறிவித்துள்ளனர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அந்த தியேட்டரில் பத்து தல படத்தின் காலை 8 மணி ஷோவை பார்ப்பதற்கு நரிக்குறவர் இனத்தை சேர்ந்த இரண்டு பெண்களும் ஒரு சிறுவனும் வந்திருந்தனர். இதை தொடர்ந்து படத்திற்கான டிக்கெட்டை தியேட்டர் நுழைவு வாயிலில் நின்று கொண்டிருந்த ஊழியரிடம் கொடுத்து உள்ளே செல்ல முயன்றுள்ளனர். ஆனால் அந்த ஊழியர் அவர்களை உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டார்.
TNTET PAPER 2.., 1.5 லட்சம் பேர் தேர்வு எழுதவில்லை.., தேர்வு வாரியம் வெளியிட்ட ரிப்போர்ட்!!
இதையடுத்து அங்கிருந்த ஒருவர், “கையில் தான் டிக்கெட் இருக்கிறதே அப்புறம் ஏன் உள்ளே விட மறுக்கிறீர்கள்” என ஊழியரிடம் கேள்வி எழுப்பியும்; அவர்களை உள்ளே விட ஊழியர் மறுத்துவிட்டார். இப்படி தியேட்டர்குள் ஜாதி பார்க்காதீங்க என்று அங்கிருந்த ரசிகர்கள் கூச்சலிட்டனர். இதனை தொடர்ந்து கொஞ்சம் நேரம் கழித்து அவர்களை உள்ளே அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.