தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளுக்கு தகுதிவாய்ந்த ஆசிரியர்களை நியமனம் செய்யும் பொருட்டு TNTET தேர்வுகள் நடத்த படுகிறது. இந்த ஆசிரியர் தகுதி தேர்வானது paper 1மற்றும் 2 என்ற முறையில் நடத்தப்பட்டு வருகிறது. இதன் paper 2 தேர்வு கடந்த பிப்ரவரி 3 முதல் 15 வரை நடந்து முடிந்திருந்தது. இதன் பிறகு இந்த தேர்வுக்கான விடைக்குறிப்புகள் இணையத்தில் வெளியிடப்பட்டது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இந்நிலையில் இதற்கான முடிவுகள் இந்த மாதம் 25 ஆம் தேதி இணையத்தில் வெளியிட பட்டது. இதன்படி இந்த தேர்வில் 2 % பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியானது. இப்படி இருக்க அதிகாரபூர்வ தகவல் ஒன்றை இந்த தேர்வு வாரியம் தற்போது வெளியிட்டுள்ளது. அதாவது இந்த தேர்வினை எழுதுவதற்கு மொத்தம் 401886 பட்டதாரி ஆசிரியர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதில் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் மட்டுமே தேர்வு எழுதியுள்ளதாகவும், 1 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு மேற்பட்டோர் இந்த தேர்வினை எழுதவே இல்லை என்ற அதிர்ச்சிகரமான செய்தி வெளியாகியுள்ளது.
தளபதியின் LEO படத்தில் திடீர் மாற்றம்.., சென்னையிலேயே மொத்த சம்பவத்தை செய்யும் படக்குழு!!