சமூக அக்கறைகளை பள்ளிப்பருவத்திலே மாணவர்கள் கற்றுக் கொள்ள ஏதுவாக என்.சி.சி., என்.எஸ்.எஸ். உள்ளிட்டவை பள்ளிகளில் செயல்பட்டு வருகிறது. இதன்மூலம் ஒழுக்கம், நன்னடைத்தை போன்ற விஷயங்களை மாணவர்கள் கற்றுக் கொள்வதால் காவல் மற்றும் ராணுவத்துறைகளில் இவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
மேலும் இதில் சிறப்பாக பங்கேற்று படிப்பிலும் முதன்மையாக விளங்குபவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் காரைக்குடியில் 9வது என்.சி.சி. பட்டாலியனுக்குட்பட்ட பள்ளி, கல்லூரி என்.சி.சி. மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் 4 மாவட்டங்களை சேர்ந்த என்.சி.சி. மாணவர்கள் கலந்து கொண்டதில் அழகப்பா மெட்ரிக் பள்ளியை சேர்ந்த 5 மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது. ஒவ்வொரு மாணவிகளுக்கும் லெப்டினல் கர்னல் மிஸ்ரா தலா ரூ.6,000 மற்றும் ரூ.2,000 வழங்கினார்.