களைகட்டிய ‘நமஸ்தே டிரம்ப்’ – இந்தியர்களின் ஒற்றுமையை புகழ்ந்த டிரம்ப்..!

0

இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் குஜராத்தின் அகமதாபாத்தில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ‘நமஸ்தே டிரம்ப்’ நிகழ்ச்சியில் உரையாற்றினார். இதில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

சபர்மதியில் கை ராட்டை ..!

அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலினா டிரம்ப் மற்றும் அதிகாரிகளுக்கு அஹமதாபாத் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடி கட்டித்தழுவி டிரம்ப்பை வரவேற்றார். பின்பு அங்கிருந்து சபர்மதி ஆசிரமத்திற்கு காரில் சென்றனர். வழிநெடுகிலும் லட்சக்கணக்கான மக்கள் வவேற்பு அளித்தனர்.

சபர்மதி ஆசிரமத்தில் இருந்த கை ராட்டையை டிரம்ப்பும் அவரது மனைவியும் தரையில் அமர்ந்து இயக்கினர். மேலும் அங்கிருந்த 3 குரங்கு பொம்மைகள் குறித்து பிரதமர் மோடி அவர்களுக்கு விளக்கினார். பின்பு அங்கிருந்த வருகைப்பதிவேட்டில் டிரம்ப் கையெழுத்திட்டு சென்றார்.

நமஸ்தே டிரம்ப்..!

அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் பிரதமர் மோடியும், டிரம்ப்பும் கலந்து கொண்டனர். அங்கு திரண்டிருந்த லட்சக்கணக்கான மக்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர். இரு நாட்டு தேசிய கீதங்களும் இசைக்கப்பட்டு விழா தொடங்கியது. பிரதமர் மோடி வரவேற்புரை நிகழ்த்தினார்.

டிரம்ப், நமஸ்தே என்று தனது உரையை தொடங்கி, இந்திய மக்களின் நெருங்கிய நண்பனாக அமெரிக்கா என்றும் இருக்கும். இந்தியர்களின் ஒற்றுமை உலகிற்கே எடுத்துக்காட்டாக உள்ளது. டீ விற்பனையாளராக இருந்தவர் நாட்டின் தலைவராகியுள்ளார். மேலும் இந்தியா – அமெரிக்கா இடையே புதிதாக பல ராணுவ ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதைப் பற்றியும் பேசினார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here