இந்தியாவில் ரஞ்சி டிராபி தொடரானது, மும்பை, கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட பல நகரங்களை மையமாக கொண்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த டிராபியில், மும்பை மற்றும் அசாம் அணிகளுக்கு இடையில் இன்று போட்டி நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற அசாம் அணி பவுலிங்கை தேர்வு செய்தது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதையடுத்து மும்பை அணியில் பிரித்வி ஷா மற்றும் முஷீர் கான் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 123 ரன்கள் எடுத்து அசத்தி இருந்தனர். இதில், முஷீர் கான் 42 ரன்களில் வெளியேற, இவரை தொடர்ந்து அர்மான் ஜாஃபர் 27 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இதன் பின், பிரித்வி ஷா மற்றும் அஜிங்க்யா ரஹானே ஆகியோர் அதிரடி காட்ட தொடங்கினர்.
டிசம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை அறிவித்த ஐசிசி!!
இவர்களில், பிரித்வி ஷா 283 பந்துகளில் 33 பவுண்டரி ஒரு சிக்ஸர் உட்பட இரட்டை சதம் விளாசி (240* ரன்கள்) அசத்தியுள்ளார். அஜிங்க்யா ரஹானே 5 பவுண்டரி உட்பட 73* ரன்கள் எடுத்துள்ளார். இதன் மூலம், முதல் நாள் முடிவில் மும்பை அணி 2 விக்கெட் இழப்புக்கு 397 ரன்களை எடுத்துள்ளது.