சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி சென்னை சிதம்பரம் மைதானத்தில் தனது வலைப்பயிற்சியை ஆரம்பித்து விட்டார். அதனைக் காண்பதற்கு ரசிகர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
8 மாதங்களுக்கு பிறகு..!
தோனி கடைசியாக உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் மட்டுமே பங்கேற்றார். அதற்கு அடுத்து 8 மாதங்களுக்கு அவர் எந்த சர்வதேச போட்டியிலும் பங்கேற்கவில்லை. எனவே அவர் ஐபிஎல் போட்டியில் விளையாடுவதை காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இந்நிலையில் அவர் சென்னையில் பயிற்சி செய்வதைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.
சென்னை வந்தார் தோனி..!
ஐபிஎல் போட்டி பயிற்சிக்காக சென்னை வந்த தல தோனி மற்றும் சின்ன தல ரெய்னாவை பார்க்க ரசிகர்கள் படையெடுத்த வண்ணம் உள்ளனர். ஒரு வீரரின் பயிற்சியைக் காண்பதற்கே ரசிகர்கள் அதிகம் வருவது தோனிக்காக மட்டும்தான். அந்த வகையில் தோனியும் பயிற்சியின் போது சிக்ஸர்கள் ஆக அடித்து பறக்க விடுவதால் ரசிகர்களும் ஐபிஎல் போட்டிக்காக ஆர்வமாக உள்ளனர்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |