‘மிஸ்டர் & மிஸர்ஸ் சின்னத்திரையில் அர்ச்சனாவை கூப்பிடாதீங்க, காண்டாகுது’ – கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!!

0

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பப்பட்டு வந்த “மிஸ்டர் & மிஸர்ஸ். சின்னத்திரை” நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் வரும் ஏப்ரல் 24 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது. அர்ச்சனா இதனை தொகுத்து வழங்குவதை பலரும் வன்மையாக கண்டித்து வருகின்றனர்.

“மிஸ்டர் & மிஸர்ஸ். சின்னத்திரை” நிகழ்ச்சி

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் நிகழ்ச்சி தான், “மிஸ்டர் & மிஸர்ஸ். சின்னத்திரை” இதில் பல முன்னணி நட்சத்திர ஜோடிகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் பிரபலம் அடைவர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஜோடிகள் தங்களது துணையுடன் பல போட்டிகளில் பங்கேற்று வெற்றி அடைவர்.

இரவு 8 மணி முதல் ஊரடங்கு அமல் – மாநில முதல்வர் அதிரடி நடவடிக்கை!!

அந்த வகையில் தற்போது இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது பாகம் ஒளிபரப்பட இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கோபிநாத், நடிகை பிரியதர்ஷினி ஆகியோர் இந்த முறையும் இவர்கள் பங்கு பெற இருக்கின்றனர். அதே போல் இந்த முறை “பிக் பாஸ்” புகழ் அர்ச்சனா தொகுத்து வழங்க இருக்கிறார். இதற்கான ப்ரோமோவும் தற்போது வெளியாகி உள்ளது. இந்த நிகழ்ச்சியில் இந்த முறை சரத் – கிருத்திகா சரத், மைனா நந்தினி – யோகேஷ், படவா கோபி – ஹரிதா உட்பட 12 ஜோடிகள் பங்கு பெற இருக்கின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இப்படியாக இருக்க, இந்த நிகழ்ச்சியினை அர்ச்சனா தொகுத்து வழங்க இருப்பது ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை என்று தான் கூற வேண்டும். இந்த ப்ரோமோ வீடியோவில் பலரும் மணிமேகலை அல்லது “அறந்தாங்கி” நிஷா தான் தொகுத்து வழங்க வேண்டும் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். அதே போல் அர்ச்சனா தொகுத்து வழங்க இருப்பது தங்களது பிடிக்கவில்லை என்று வெளிப்படையாக கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here