இரவு 8 மணி முதல் ஊரடங்கு அமல் – மாநில முதல்வர் அதிரடி நடவடிக்கை!!

0

நாட்டில் கடந்த மாதம் முதல் கொரோனா நோய் தொற்று மிக தீவிரமாக இருந்து வருகிறது. தற்போது இதன் காரணமாக பஞ்சாப் மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.

இரவு நேர ஊரடங்கு:

நாட்டில் கொரோனாவின் இரண்டாவது அலை, முதல் அலையை விட மிக தீவிரமாக மக்களை பாதித்து வருகிறது. தற்போது நாட்டில் கொரோனவால் நாள் ஒன்றுக்கு சுமார் ஆயிரக்கணக்கானோர் தங்களது உயிரை இழந்து வருகின்றனர். மேலும் நாள் ஒன்றுக்கு தற்போது கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை தாண்டி வருகிறது. இதன் எதிரொலியாக அனைத்து மாநிலங்களிலும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனை தடுப்பதற்கு சுகாதாரத்துறையினர் முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றனர். மேலும் நாட்டில் தற்போது தடுப்பூசி பணிகளை தீவிரப்படுத்த நாட்டின் பிரதமர் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார். இந்நிலையில் இந்தியாவில் சில மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகமாக கண்டறியப்பட்டு வருவதால் மிக கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. மேலும் சில மாநிலங்களில் முழு நேர ஊரடங்கு மற்றும் சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு விதிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கொரோனா தொற்று எதிரொலி – டாஸ்மாக் கடைகளுக்கு நேரங்கள் குறைப்பு!!

தற்போது அந்த வகையில் பஞ்சாப் மாநிலத்தில் கொரோனா நோய்பரவல் காரணமாக இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி தற்போது பஞ்சாப் மாநிலத்தில் இரவு 8 மணி முதல் மறுநாள் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் என்று மாநில முதல்வர் அமரீந்தர் சிங்க் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தில் கொரோனா தொற்று காரணமாக திரையரங்குகள், மதுக்கடைகள் மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் மூடப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here