ஜீ தமிழ் தொலைக்காட்சி தற்போது தொடர்ந்து சரிவில் இருந்து வரும் நிலையில் மேலும் ஒரு முக்கிய பிரபலம் அதிலிருந்து விலகியுள்ளார். இதனால் ஜீ தமிழின் நிலை என்ன ஆக போகிறது என பலரும் கவலையில் உள்ளனர்.
ஜீ தமிழ்
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பலவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதில் தற்போது முன்னிலையில் இருப்பது சன் டிவி, விஜய் டிவி, கலர்ஸ் தமிழ் மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சி தான். ஆனால் ஒவ்வொன்றிற்கும் ஒரு வித்தியாசம் உள்ளது. சீரியல் என்றால் அது விஜய் டிவியையும், சன் டிவியையும் அடிச்சுக்க முடியாது. ஆனாலும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிக்கொன்டுள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
ஆனாலும் விஜய் டீவியை பாலோவ் செய்வது எது என்றால் அது ஜீ தமிழ் தான். விஜய் டிவி என்ன செய்தாலும் அதனை அப்படியே காப்பி அடிப்பதை வழக்கமாக்கி வைத்திருந்தனர். ஆரம்பத்தில் சேனல் ஓரளவிற்கு சென்றாலும் தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் மிகவும் சரிவை கண்டுள்ளது. மேலும் பலரும் சீரியலை விட்டு விலகி வருகின்றனர். பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியல் கார்த்திக் விலகியவுடன் சீரியல் மோசமாக போயிக்கொண்டுள்ளது.
இரவு 8 மணி முதல் ஊரடங்கு அமல் – மாநில முதல்வர் அதிரடி நடவடிக்கை!!
அதன் பிறகு அர்ச்சனாவும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக ஜீ தமிழை விட்டு வெளியே வந்தார். தற்போது விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். அதன் பிறகு பூவே பூச்சூடவா ரேஷ்மா கலர்ஸ் தொலைக்காட்சிக்கு தாவினார். அதில் டைலர் என்ற சீரியலில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இப்படி இருக்க ஜீ தமிழ் மதனும் அங்கிருந்து விலகியுள்ளார். அதாவது ரேஷ்மாவும் மதனும் காதலித்து வரும் நிலையில் இந்த டைலர் சீரியலில் அவர் தான் ஹீரோவாக நடிக்க உள்ளார். ஜீ தமிழில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் இவர் தான். அப்படி இருக்க இவரும் ஜீ தமிழை விட்டு விலகியுள்ளார். இது பலரையும் அதிர்ச்சியாகியுள்ளது.