மௌன ராகம் சீரியல் பற்றி தருண், வருண் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – மிஸ் பண்ணாம பாருங்க!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த மௌன ராகம் சீரியல் மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில் தருண், வருண் இணைந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

மௌன ராகம்

மௌன ராகம் சீரியல் தற்போது போடப்பட்ட லாக்டவுனுக்கு முன்பாக பல விறுவிறுப்பான கட்டங்களுடன் நகர்ந்து கொண்டிருந்தது. சக்தியின் அம்மா உடல்நிலை சரியில்லாமல் இருக்க மனோகர் இதுதான் சமயம் என்று பணத்தை கொடுத்து சக்தியை வருணை திருமணம் செய்ய சொல்லி வற்புறுத்துகிறார்.

சக்தியும் வேறு வழியில்லாமல் இந்த திருமணத்திற்கு ஒத்துக்கொள்கிறார். கடைசி நேரத்தில் தருணுக்கு சக்தி தான் வருணை திருமணம் செய்ய போகிற பெண் என்ற உண்மையே தெரிகிறது. அது தெரிந்ததும் நொந்து போகிறார் தருண். வருணுக்கும் தன்னை காப்பாற்றிய சக்தியை மிகவும் பிடித்து போகிறது.

இத்தனை நாட்கள் கல்யாணம் வேண்டாம் என்று சொல்லி கொண்டிருந்த வருண் இந்த திருமணத்திற்கு ஒத்துக்கொண்டது பலரையும் சந்தோசத்தில் ஆழ்த்தியது. இந்த திருமணம் நடக்குமா?? நடக்காதா? என்று பலரும் ஆர்வமாக இருந்த நேரத்தில் லாக்டவுன் போடப்பட்டது. தற்போது வரை சீரியல் தொடங்கப்படாமல் இருக்க கூடிய விரைவில் ஆரம்பிக்க இருப்பதாக சீரியல் குழு தெரிவித்தது. இந்நிலையில் தருண் மற்றும் வருண் இணைந்து விடியோவை வெளியிட்டுள்ளனர். அதாவது coming soon என்று கூறியுள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Tamil Tellywood (@tamil_tellywood)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here