பணத்தை கொடுத்து வருணை திருமணம் செய்ய சக்திக்கு கண்டிஷன் போடும் மனோகர் – ஒத்துக்கொள்வாரா சக்தி??

0

மௌன ராகம் சீரியலில் தொடர்ந்து பல விறுவிறுப்பான பல சம்பவங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. மல்லிகாவின் ஆபரேஷனுக்கு மனோகர் பணம் தர முடிவெடுக்கிறார்.

மௌன ராகம்

மௌன ராகம் சீரியலில் நேற்று மனோகர் ஷீலாவிடமும், தருணிடமும் வருணை காப்பாற்றிய பெண்ணிற்கு கல்யாணம் செய்து வைக்கலாம் என்று சொல்கின்றார். இதனால் கடுப்பாகும் தருண் அந்த பெண் யார் என்று கூட கேட்காமல் சென்று விடுகிறார். தருண் சென்றதும் ஷீலாவிடம் சக்தி தான் வருணை காப்பாற்றியது என்று சொல்கிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால் ஷீலாவுக்கு ஷாக்காகிறது. இதற்கு சக்தி ஒத்துக்கொள்வாரா?? என்று கேட்கிறார். ஒத்துக்க வைப்போம் என்று கூறுகிறார். மேலும் சக்தி ஹாஸ்பிடலில் யார் உதவியும் கிடைக்காமல் கதறிக்கொண்டுள்ளார். அப்பொழுது டாக்டர் அங்கு வந்து அம்மாவை வீட்டுக்கு கொண்டு போங்க என்று சொல்கிறார். இதனால் டாக்டரிடமும் போய் கெஞ்சுகிறார்.

என்ன கெஞ்சியும் டாக்டர் கேட்பதாக இல்லை. கடைசியில் சக்தி டாக்டர் காலில் விழுந்து கெஞ்சுகிறார். அப்பொழுது மனோகர் அங்கு வர தான் பணத்தை கட்டுவதாக சொல்கிறார். மேலும் பதிலுக்கு ஒரு உதவி செய்ய வேண்டும் என்று சொல்கிறார். அடுத்து கார்த்திக் வீட்டில் ஸ்ருதி கோவமாக கத்துகிறார்.

அங்கு சக்திக்கு உதவி செய்வதை பற்றி சொல்கிறார். இதனால் வீட்டில் உள்ள அனைவரும் கோவமடைகின்றனர். அவளால் தான் தனக்கு வாழ்க்கை போச்சு என்று சொல்ல கார்த்திக்கு கோவம் வருகிறது. ஸ்ருதி தான் சின்ன பொண்ணு உங்களுக்கு எங்க போச்சு அறிவு என்று காதம்பரியை திட்டுகிறார்.

பிறகு சக்தி மனோகருக்கு நன்றி சொல்கிறார். அப்பொழுது தருண் மற்றும் வருண் பற்றி மனோகர் சொல்கிறார். அடுத்து பெரிய பையன் வருணை கல்யாணம் பண்ணிக்கணும் என்று சொல்கிறார். இதனால் சக்திக்கு ஷாக்காகிறது. மனோகர் நீ தற்கொலையில் இருந்து கைப்பற்றியதும் நீ தான்.

நீ கல்யாணம் பண்ணிக்கிட்டா அவன் வாழ்க்கை நல்லா இருக்கும் என்று சொல்கிறார். ஆரம்பத்தில் சக்தி மறுக்கிறார். கடைசியில் வாக்கு கொடுத்தது நினைவுக்கு வருகிறது. என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here