திரிஷ்யம் 2 படம் பற்றி அஸ்வின் கருத்து – நன்றி தெரிவித்த மோகன்லால்!!

0

மலையாளத்தில் திரிஷ்யம் 2 என்னும் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி அனைவராலும் கவரப்பட்டுள்ளது. இந்த படத்தை பார்த்த இந்திய அணியின் பந்துவீச்சாளர் அஸ்வின் தனது பாராட்டை தெரிவித்தார். தற்போது அதற்கு மோகன்லால் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

திரிஷ்யம்:

மலையாளத்தில் வெளிவந்து 50 கோடி வசூல் செய்த முதல் படம் என்ற சாதனையை பெற்ற திரைப்படம் தான் திரிஷ்யம். இந்த படம் செம ஹிட் ஆனது. மேலும் இந்த படம் தமிழில் பாபநாசம் என்னும் பெயரில் வெளிவந்தது. இந்த படத்தில் தமிழில் கமல் மற்றும் கௌதமி நடித்தனர். மேலும் இந்த படம் ஹிந்தி, கன்னடம், தெலுங்கு, சீனம் உள்ளிட்ட பல மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டது. இந்த அனைத்து மொழிகளிலும் வெவ்வேறு இயக்குனர்கள் இந்த படத்தை இயக்கியுள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது மலையாளத்தில் இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து ரசிகர்கள் இந்த படத்தின் இரண்டாவது பாகத்தை கேட்டு வந்தனர். தற்போது இதனை தொடர்ந்து த்ரிஷ்யம் 2 படத்தில் மோகன்லால் மற்றும் மீனா நடித்துள்ளனர். இந்த படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அமேசான் பிரைம் தளத்தில் வெளியானது. அதில் பல்லாயிரக்கானவர்கள் இந்த படத்தை பார்த்து மகிழ்ந்தனர். மேலும் சமூகவலைத்தளங்களில் இந்த படம் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

மோகன்லால்:

இந்த படத்தை பார்த்த இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தனது ட்விட்டரில் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, நீதிமன்ற காட்சிகளில் நடந்த திருப்பத்தை நான் மிகவும் ரசித்து பார்த்தேன், யாரும் படத்தை பார்க்கவில்லை என்றால் முதல் பாகத்தில் இருந்து பாருங்கள் என்று கூறினார்.

நீல நிற புடவையில் இடுப்பை காட்டி போஸ் கொடுத்த யாஷிகா – சொக்கிப்போன ரசிகர்கள்!!

தற்போது இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மோகன்லால் கூறியதாவது, கிரிக்கெட் போட்டிகள் நடக்கும் இந்த பரபரப்பான சூழ்நிலையில் இதுக்கென்று தனியாக நேரத்தை ஒதுக்கி எங்கள் படத்தை பார்த்து அதற்கு கருத்தை தெரிவித்ததற்கு நன்றி. இது தான் எங்களுக்கு முக்கியம். உங்கள் போட்டிகளுக்கு எனது வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here