இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் 5ம் தேதி முதல் ஒருநாள் உலக கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. பத்து அணிகள் பங்குபெற உள்ள இந்த தொடருக்கான முதற்கட்ட அணி விவரங்களை வரும் செப்டம்பர் 5ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என ஐசிசி தெரிவித்து இருந்தது. இதன்படி, இந்த உலக கோப்பை தொடருக்கான முதல் அணியை கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி ஆஸ்திரேலிய அணி அறிவித்தது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இந்த அணியில், முன்னணி வீரர்களான பாட் கம்மின்ஸ் (சி), ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், மிட்செல் ஸ்டார்க் உள்ளிட்ட 18 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். உலக கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள வீரர்களின் உடல் மற்றும் மன நிலையை சீராக வைப்பதற்காக, உலக கோப்பைக்கு முன்பான சில போட்டிகளில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில், காயங்கள் ஏற்பட்டுள்ள மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஸ்டீவன் ஸ்மித் வரும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி முதல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக விளையாட உள்ள தொடரில் இருந்து விலகி ஓய்வெடுக்க உள்ளனர்.
மது பிரியர்கள் கவனத்திற்கு.., டாஸ்மாக் கடைகளில் கொண்டுவரப்பட்ட அதிரடி மாற்றம்.., வெளியான அறிவிப்பு!!