தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் கடந்த சில நாட்களாகவே மது பாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்கப்பட்டு வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. இதை தடுப்பதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்த நிலையில், தற்போது டாஸ்மாக் கடைகளில் முக்கிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
அதாவது தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் டிஜிட்டல் போர்டு நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த டிஜிட்டல் போர்டில் எந்தெந்த மதுபானங்கள் எவ்வளவு விலை என குறிக்கப்பட்டிருக்கும். இதன் மூலம் மது பிரியர்கள் விலை பட்டியலை தெரிந்து கொள்ளலாம். மேலும் மாவட்டத்துக்கு 5 கடைகள் வீதம் முதற்கட்டமாக 200 டாஸ்மாக் கடைகளை நவீனப்படுத்தும் திட்டமும் செயல்படுத்த உள்ளது.
வாட்ஸ்அப் பயனாளர்களே., இனி Parallel Space, Dual App தேவையில்லை., செம்ம அப்டேட் அறிமுகம்!!!