தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அவ்வப்போது எதாவது பேசி சர்ச்சையில் சிக்குவது வழக்கமான நிகழ்வு. அந்த வகையில் பழங்குடியை சேர்ந்த சிறுவன் ஒருவனை அழைத்து தனது செருப்பை கழட்ட சொன்ன வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
முதுமலை புலிகள் காப்பகத்தில்..!
வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்
நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் அமைந்துள்ள வளர்ப்பு யானைகள் நல்வாழ்வு முகாமை தொடங்கி வைக்க அமைச்சர் சீனிவாசன் சென்று இருந்தார். நிகழ்ச்சிக்கு முன்பாக ஒரு கோவிலுக்கு சென்ற அவர் அங்கிருந்த பழங்குடி இனத்தைச் சேர்ந்த சிறுவனை அழைத்து தனது செருப்பை கழட்டி மாட்டிவிட சொன்ன சம்பவம் தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. மேலும் இந்த சம்பவத்தின் போது மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவும் உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அமைச்சரின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |