திருச்சூர் மாவட்டம் சாலக்குடி பகுதியில் உள்ள சாலமோன் அவென்யூ அபார்ட்மெண்டில் உள்ள 18க்கும் மேற்பட்ட வீடுகளில் உள்ள குழாய்களில் மதுபானம் வந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கிணற்றில் மதுபானம்..!
சினிமாவில் கூறப்பட்டது போல நடைபெற்ற இந்த நிகழ்வால் குடியிருப்புவாசிகள் அதிர்ச்சி அடைந்தனர். குழாயில் பழுப்பு நிறத்தில் துர்நாற்றத்துடன் வந்த நீரில் பீர், பிராந்தி, ரம் போன்றவை கலந்த மதுபானம் வருவது தெரிய வந்தது. இது தொடர்பாக ஆராய்ந்த நகராட்சி அதிகாரிகள் அபார்ட்மெண்டிற்கு நீர் ஆதாரமாக விளங்கும் கிணற்றில் பறிமுதல் செய்யப்பட்ட 4500 லிட்டர் மதுபானங்கள் கொட்டப்பட்டது தெரியவந்தது.
இந்த கிணறு பயனற்றது என நினைத்து மதுபானத்தை கொட்டியது தெரிய வந்தது. தற்போது 8 முறைக்கு மேல் கிணறு சுத்தம் செய்யப்பட்டு விட்டதாகவும் மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேறு இடத்தில இருந்து நீர் ஆதாரம் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கபடும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |