தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுத் திட்டம் மத்திய மாநில அரசின் நிதி ஒதுக்கீடு மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் 2021-22 ஆம் நிதியாண்டில் இருந்து மதிய உணவுத் திட்டத்திற்கு, மத்திய அரசு வழங்கும் நிதி தாமதமாகி வருவதாக கேரளா கல்வித்துறை அமைச்சர் வி.சிவன் குட்டி தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் நடப்பு 2023-24 ஆம் நிதியாண்டில் மத்திய அரசின் பங்கான ரூ.251.97 கோடியில் முதல் தவணையாக ₹151.18 கோடி வழங்க வேண்டும். ஆனால்,₹108.34 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதனால் முதல் தவணையிலே ₹42.84 கோடியை குறைத்துள்ளதால், நிதி நெருக்கடியில் இருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.