டெல்லியில் விவசாயிகள் வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வருகின்றனர். இதற்கு பல்வேறு தரப்பினர் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை மியா கலீஃபா விவசாயிகளுக்கு ஆதரவாக ட்வீட் செய்துள்ளார்.
விவசாயிகள் போராட்டம்:
சுமார் கடந்த 2 மாத காலமாக விவசாயிகள் மத்திய அரசு விதித்த வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வருகின்றனர். இதற்காக மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே 12 கட்ட பேச்சு வார்த்தைகள் நடந்துள்ளது. ஆனால் அவை அனைத்தும் பலனில்லாமல் தான் போனது. மேலும் கடந்த குடியரசு தின விழாவின் போது பெரிய கலவரமே ஏற்பட்டது. இதில் 100கும் மேற்பட்ட போலீசார் மற்றும் விவசாயிகள் காயமடைந்தனர். மேலும் இந்த கலவரம் குறித்து போலீசார் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
100கும் மேற்பட்டவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் பல விவசாயிகள் மீது வழக்குகளை பதிவு செய்துள்ளனர். தற்போது விவசாயிகள் வரும் 6ம் தேதி அன்று தேசிய, மாநில போக்குவரத்துக்கு சாலைகளில் மறியல் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்தனர். தற்போது இதில் அதிக விவசாயிகள் கூடுவதை தவிர்க்கும் வகையில் டெல்லி எல்லையில் போலீசார் தடுப்பு அமைத்து கண்காணித்து வருகின்றனர்.
‘பிரசாத் ஸ்டுடியோவை விட்டு வெளியேறியது வருத்தமில்லை’ – இளையராஜா விளக்கம்!!
போராட்டங்களை தவிர்க்கும் வகையில் டெல்லியில் தற்போது இணைய சேவையை தடை செய்துள்ளனர். இதற்கு பல்வேறு தரப்பினர் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். அமெரிக்க பாப் பாடகி ரிஹானா இதனை சுட்டிக்காட்டி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். தற்போது நடிகை மியா கலீஃபா இதனை சுட்டிக்காட்டி என்ன மாதிரியான மனித உரிமை மீறல் இது? புதுடெல்லியில் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது, என்று விவசாயிகளுக்கு ஆதரவாக ட்வீட் செய்துள்ளார்.