பிரசாத் ஸ்டுடியோஸிலிருந்து வெளியேறிய நிலையில் தற்போது இளையராஜா தனது புதிய ஸ்டுடியோவை திறந்துள்ளார். அப்போது பேசிய அவர் பிரசாத் ஸ்டுடியோஸிலிருந்து வெளியேறியது வருத்தமில்லை என்று கூறியுள்ளார்.
இளையரஜா:
சினிமாவின் இசைஞானி என்று அழைக்கப்படுபவர் தான் இளையராஜா. இவர் பல்லாயிரக்கணக்கான பாடல்களை இசையமைத்துள்ளார். மேலும் இவரது பாடலுக்கென தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இவரது இசைக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளார்கள். அந்த அளவிற்கு இவர் தனது இசை மூலம் ரசிகர்களை கட்டிபோட்டுள்ளார் என்றே சொல்லலாம். இவர் ஆரம்ப காலங்களில் இருந்தே தனது இசைஅமைப்பை பிரசாத் ஸ்டுடியோஸில் வைத்து செய்து வந்தார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
பல வருடங்கள் அங்கு வைத்தே தனது இசை வேலைகளை செய்து வந்தார். அதன் பின்பு பிரசாத் ஸ்டுடியோஸ் நிறுவனத்திற்கும் இளையராஜாவிற்கும் ஏற்பட்ட பிரச்சனைகளால் இவர் பிரசாத் ஸ்டுடியோஸில் இருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது. இவர்கள் பிரச்னை நீதிமன்றம் வரை சென்று பின்பு தான் முடிவுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இளையரஜா தனது புது ஸ்டுடியோவை திறந்துள்ளார்.
புது ஸ்டூடியோ:
கோடம்பாக்கத்தில் உள்ள MM Preview தியேட்டரை வாங்கி அதனை தற்போது தனது ஸ்டுடியோவாக மாற்றியுள்ளார் இளையராஜா. தற்போது அந்த ஸ்டுடியோவில் முதன்முதலாக இசையமைப்பு பணிகளை துவங்கியுள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடித்து வரும் படத்திற்கு தற்போது இளையராஜா தனது புது ஸ்டுடியோவில் இசைவேலைகளை ஆரம்பித்துள்ளார்.
பாரதி கையில் சிக்கும் ஹேமாவின் டிஎன்ஏ டெஸ்ட் ரிபோர்ட் – பதட்டத்தில் வெண்பா!!
இந்த புதிய ஸ்டூடியோ திறப்பிற்கு இயக்குனர்கள் பாரதிராஜா, வெற்றிமாறன் மற்றும் நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது இளையராஜா பிரசாத் ஸ்டுடியோசை விட்டு வெளியேறியது வருத்தம் இல்லை என்றும் சாலையில் நடந்து செல்லும் பொழுது தலையில் காகத்தின் எச்சம் விழுந்தால் யாராவது வருத்தப்படுவார்களா?? என்றும் கூறியுள்ளார்.