குறுவை சாகுபடிக்காக ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தெரிவித்து உள்ளார். மேலும் விவசாயிகளுக்கான சில அறிவிப்புகளையும் வெளியிட்டு உள்ளார்.
முதல்வரின் அறிவிப்புகள்:
குறுவை சாகுபடிக்காக ஜூன் 12ம் தேதி காலை 10 மணிக்கு மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பகுதி விவசாயிகளுக்கு பாசனத்திற்காக திறக்கப்படுகிறது. இதனால் நடப்பு ஆண்டில் 3.25 லட்சம் ஏக்கர் குறுவை நெல் சாகுபடி நடைபெறும் எனவும்,தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100.01 அடியாகும், நீர் இருப்பு 64.85 டிஎம்சி ஆக உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. டெல்டா பகுதிகளில் 12 மணிநேர தடையில்லா மும்முனை மின்சாரம் கிடைப்பதை மின்சாரத் துறை உறுதி செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.
சாகுபடிக்கு தேவையான நெல் விதைகளை தேவையான அளவு கைஇருப்பில் வைத்திருக்கவும், குறுவை சாகுபடிக்கு தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம் வட்டியில்லா கடன் வழங்கப்படும் எனவும் முதல்வர் அவர்கள் தெரிவித்து உள்ளார். மேட்டூர் அணையில் தற்போது உள்ள நீர் 50 நாட்களுக்கு போதுமானது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |