சென்னை மெட்ரோ, பயணிகளின் வசதிக்காக ஒவ்வொரு நாளும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட வண்ணம் வருகிறது. குறிப்பாக பண்டிகை நாட்களில் பொதுமக்கள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய ஏதுவாக அட்டவணையில் சில மாற்றம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இன்று ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அரசு பொது விடுமுறை அளித்துள்ளது.
இதன் காரணமாக இன்று மெட்ரோ ரயிலில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை குறைவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. இதனால் சென்னையில் இன்று மெட்ரோ ரயில்கள் ஞாயிறு அட்டவணைப்படி இயக்கப்படும் என தெரிவித்துள்ளனர். அதன்படி காலை 8 மணி முதல் மதியம் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
தமிழக மக்களே.., இன்று முதல் ஏப்.15 வரை மழைக்கு வாய்ப்பு.., வானிலை மையம் எச்சரிக்கை!!