தமிழகத்தில் அரசு ஊழியர்களின் நலனுக்காக பல்வேறு வசதிகளை தமிழக அரசு செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கையில் அரசு ஊழியர்கள் வருமான வரி சரியாக செலுத்துகிறார்களா என்பது கண்காணிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இப்போது வருமான வரித்துறை அதிரடி நடவடிக்கை ஒன்றை கையில் எடுத்துள்ளனர். அதாவது அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் டி ஏ எஸ் வரியை உரிய கணக்குடன் வருமான வரித்துறைக்கு சமர்ப்பிப்பது வழக்கம்.
மகளிர் உரிமைத் தொகை பெற மீண்டும் சிறப்பு முகாம்.., விடுபட்டவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்!!!
ஆனால் இப்போது ஊழியர்கள் பிடித்த டி ஏ எஸ் வரியை உரிய கணக்கில் சேர்க்காத 5,563 நபர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனால் நோட்டீஸ் பெற்ற அரசு ஊழியர்கள் உடனடியாக பிடித்தம் செய்த தொகையை விரைவில் செலுத்தி சரியான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். ஒருவேளை இதை செய்ய தவறும் பட்சத்தில் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.