தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் டாப்பில் இருப்பவர் தான் நடிகர் வடிவேலு. இவர் தற்போது உதயநிதியின் கடைசி படமான மாமன்னன் திரைப்படத்தில் மாறுபட்ட கேரக்டரில் நடித்துள்ளார். இதனால் இப்படத்தின் எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்து வருகிறது. சமீபத்தில் சூட்டிங் முடிவடைந்த நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நேற்று நடைபெற்றது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
kஇந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். அப்போது மேடையில் வடிவேலு, பல சுவாரஸ்யமான விஷயங்களை பேசினார்.இதனை தொடர்ந்து பத்திரிக்கையாளர்கள் அவரை சூழ்ந்து கொண்டு பல கேள்விகளை சரமாரியாக கேட்டனர்.
அதற்கெல்லாம் பொறுமையாக பதிலளித்த அவர், நான் எங்கேயும் போகவில்லை, மீம்ஸ் வழியாக உங்களுடன் தான் இருக்கிறேன், எனக்கு எப்பொழுதும் கேப்பே கிடையாது என்று கூறினார். அதன் பின்னர் மாமன்னன் படத்தை பற்றி பெருமையாக பேசிய அவரிடம், கதாபாத்திரம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
மாற்றி அறிவிக்கப்பட்ட பள்ளிகள் திறப்பு தேதி…, வெளியான முக்கிய தகவல்!!
அதற்கு காண்டான அவர், இங்கிருந்தா என் வாய புடுங்கி கதையை வாங்கிருவீங்க என்று அங்கிருந்து நைசாக நழுவி உள்ளார். மேலும் இந்த விஷயம் தற்போது ஹாட் டாப்பிக்காக சோசியல் மீடியாவில் பேசப்பட்டு வருகிறது.