சினிமாவில் பான் இந்திய நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான சாகுந்தலம் திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் படுதோல்வி அடைந்தது. இதனால் அவருடைய மார்க்கெட் குறைய தொடங்கியுள்ளதாக சினிமா வட்டாரங்களில் பேச தொடங்கினாலும், தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் குஷி என்ற படத்திலும், சிட்டாடல் என்ற வெப் தொடரிலும் நடித்து வருகிறார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இப்படி சினிமாவில் பிசியாக இருந்து வரும் இவர், முன்னாள் கணவரான நாக சைதன்யாவை விவாகரத்து செய்து தனியாக வாழ்ந்து வருகிறார். இப்படி இருக்கையில் இவர் தன்னுடன் சேர்ந்து நடித்து வரும் விஜய் தேவரகொண்டாவை காதலித்து வருவதாக சோசியல் மீடியாவில் பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில் அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அடுக்கடுக்காக கேள்வியை கேட்டு கதற விட்ட மீடியா.., சமாளிக்க தெரியாமல் நைசாக நகர்ந்த வடிவேலு!!!
அதாவது குஷி பட ஷூட்டிங் துருக்கியில் நடைபெற்று வரும் நிலையில், அங்குள்ள ஒரு ரெஸ்டாரண்ட் ஒன்றில் சரக்கு பாட்டில் டேபிளில் இருக்க, விஜய் இருவரும் ஒன்றாக இருக்கும் போட்டோவை வெளியீட்டு விஜய் தேவரகொண்டாவை தனது நண்பன் என அடித்து கூறியுள்ளார். ஒரு பக்கம் காதல் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தாலும், மறுபக்கம் குடியும்… கும்மாளமுமாக துருக்கியில் ஜாலியாக இருக்கிறார் என்று ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.
View this post on Instagram