மணிப்பூரில் கடந்த சில மாதங்களாக இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட கலவரத்தில் பலரும் உயிரிழந்து வருகின்றனர். அதேபோல் பழங்குடியின பெண்கள் கூட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாவதாக வெளியான வீடியோ, நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சியான ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சட்டா உள்ளிட்டோர் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் கருப்பு உடை அணிந்துள்ளனர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதற்கு மத்திய அமைச்சரும், ராஜ்யசபா பா.ஜ.க. தலைவருமான பியூஸ் கோயல் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அதாவது “இந்தியாவின் கவுரவ பிரச்சனையான இந்த சூழலில் எதிர்க்கட்சிகள் அரசியல் நடத்துகிறது. எதிர்க்கட்சிகளின் கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகியவையும் கருப்பு தான். எதிர்க்கட்சி எம்.பி.க்களின் வாழ்வில் ஒளி இருக்கும் என நம்புகிறேன்.” என விமர்சனம் செய்துள்ளார்.