காலிறுதியில் ஏமாற்றிய H S பிரணாய்…, மலேசிய ஓபன் பேட்மிண்டனில் இந்தியா சரிவு!!

0
காலிறுதியில் ஏமாற்றிய H S பிரணாய்..., மலேசிய ஓபன் பேட்மிண்டனில் இந்தியா சரிவு!!
காலிறுதியில் ஏமாற்றிய H S பிரணாய்..., மலேசிய ஓபன் பேட்மிண்டனில் இந்தியா சரிவு!!

மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடரில், இந்தியாவின் H S பிரணாய், ஜப்பான் வீரரிடம் வீழ்ந்து, அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை தவற விட்டார்.

மலேசிய ஓபன் பேட்மிண்டன்:

கோலாலம்பூரில் உள்ள ஆக்ஸியாட்டா அரங்கில் மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர், முன்னணி வீரர்களுக்கிடையே நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், ஆடவர்களுக்கான ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் H S பிரணாயும், இரட்டையர் பிரிவில், சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடியும் காலிறுதி சுற்றுக்கு முன்னேறி இருந்தனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இவர்களில், H S பிரணாய் காலிறுதி போட்டியில் ஜப்பானின் கோடை நரோகாவை எதிர்த்துப் போட்டியிட்டார். இந்த போட்டியில், ஆரம்ப முதல் ஆதிக்கம் செலுத்திய கோடை நரோகா முதல் செட்டை 21-16 என கைப்பற்றினார். இதனை தொடர்ந்து நடைபெற்ற 2 வது செட்டில் எழுச்சி கண்ட இந்தியாவின் H S பிரணாய் 21-19 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றார்.

உலக கோப்பை போருக்கு தயாரான இந்தியா…, ஸ்பெயின் அணிக்கு எதிராக முதல் யுத்தம்…, அணி விவரம் உள்ளே!!

இருவரும் தலா ஒரு செட்டை கைப்பற்றிய நிலையில், வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி சுற்றுக்கு போட்டி நகர்ந்து. இதில், முழு ஆதிக்கத்தையும் செலுத்திய ஜப்பானின் கோடை நரோகா 21-10 என புள்ளிகளை பெற்றதுடன், 2-1 என்ற செட் கணக்கில் இந்தியாவின் H S பிரணாய்-யை வீழ்த்தினார். இதன் மூலம், அரையிறுதி வாய்ப்பு H S பிரணாய் நழுவ விட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here