சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் அனைவரது வாழ்க்கையையும் தலைகீழாக மாற்றியது என்றே சொல்லலாம். மேலும் கொரோனாவுக்கு பின் விலைவாசி உயர்வு அதிகமாகிவிட்டது. மேலும் வேலை பளு, விலைவாசி உயர்வு போன்ற காரணங்களால் வங்கி ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதாவது வங்கி தொழிர்சங்கங்களின் அமைப்பான “யுனைடெட் ஃபோரம் ஆஃப் பேங்க் யூனியன்” பல்வேறு கோரிக்கைகளை இந்திய வங்கி சங்கத்திடம் வைத்தது. மேலும் எங்கள் கோரிக்கைகளை ஏற்காவிடில் 2 நாட்களுக்கு போராட்டம் நடைபெறும் எனவும் வங்கிகள் சார்பில் அறிவித்தனர். ஆனால் இந்திய வங்கி சங்கத்திடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.
2023ன் முதல் சட்டப்பேரவை.., இந்த விஷயத்தை முடித்துள்ளோம்.., முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!!
இதனால் அகில இந்திய வங்கி பொதுச்செயலாளரான சி.எச். வெங்கடாசலம் IANS செய்தி நிறுவனத்திடம் வாரத்தில் 5 நாட்கள் பணி, ஓய்வூதியம் புதுப்பித்தல், தேசிய ஓய்வூதிய முறையை ரத்து செய்தல், ஊதிய உயர்வு போன்ற கோரிக்கைகள் இந்திய வங்கி சங்கத்திடம் வைக்கப்பட்டது. ஆனால் இதற்கு எந்த பதிலும் வராததால் நாடு முழுவதும் ஜனவரி 30,31 தேதிகளில் போராட்டம் கடைபிடிக்கப்படும் என கூறியுள்ளார்.