உலக அளவில் தொழில்நுட்ப வளர்ச்சியில் சிறந்து விளங்கும் பெரும்பாலான நாடுகள் தங்கள் தாய் மொழிக்கு முக்கியத்துவம் தருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாட்டின் அரசு காலிப்பாணியிடங்களுக்கான TNPSC தேர்வில் தமிழ் வழி கல்வி பயின்றோருக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு வந்தது.
வங்கிப் பயனர்களுக்கு ஷாக்., தொடர் ஸ்ட்ரைக்கை அறிவித்த ஊழியர்கள்! எப்போது இருந்து தெரியுமா?
இந்நிலையில் தான் ஜனவரி 9ம் தேதி தொடங்கப்பட்ட 2023 ம் ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் 5 ம் நாளான இன்று (13.01.2023) முதலமைச்சர் பதில் உரையுடன் நிறைவடையவுள்ளது. இந்நிலையில் இந்த பேரவையில் 2021ம் ஆண்டு டிசம்பரில் கொண்டுவரப்பட்ட “அரசு பணிக்கு தமிழ் அவசியம்” என்ற அரசாணையை அமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜன் தாக்கல் செய்தார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதனால் தமிழ் மொழி தேர்வில் தேர்ச்சி பெறாமல் அரசு பணிகளில் பணிபுரிய முடியாத வகையில் TNPSC தேர்வாணையத்தில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்படும் என அறிவித்துள்ளனர். மேலும் தமிழில் போதிய அறிவு இல்லாமல் பணிபுரிபவர்கள் பணியமர்த்தப்பட்ட நாளிலிருந்து இரண்டு வருடத்திற்குள் தமிழில் தேர்ச்சி பெற வேண்டும் என்பதையும் தெரிவிக்கப்பட்டுள்ளது.