ஏற்கனவே தலிபான் தீவிரவாதியால் மலாலா சுடப்பட்டு இங்கிலாந்தில் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். தற்போது மீண்டும் அந்த தீவிரவாதி தனது ட்விட்டர் பக்கம் மூலம் மலாலாவிற்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
மலாலா:
பாகிஸ்தானில் மலாலா என்னும் சிறுமி பிபிசி உருது இணையதளத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு தலிபான்களின் தவறான செயல்களை பற்றி எழுதி உலக மக்கள் அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார். அப்போது அவருக்கு வெறும் 12 வயது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் விளைவாக அவரை தலிபான் தீவிரவாதி துப்பாக்கியால் கடுமையாக சுட்டார். கடந்த 2012ம் ஆண்டு அக்டோபர் 9ம் தேதி அன்று மலாலா வழக்கம் போல் பள்ளி முடித்து தனது நண்பர்களுடன் பேருந்தில் வந்தார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அப்போது துப்பாக்கி முனையில் பேருந்தை மடக்கிய தீவிரவாதி, பேருந்துக்குள் உள்ள மலாலாவை கொடூரமாக சுட்டார். துப்பாக்கி குண்டு மலாலாவின் கழுத்து மற்றும் தலைக்குள் புகுந்தது. இதனை தொடர்ந்து மலாலா ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்பு பாகிஸ்தான் அரசு அவரை இங்கிலாந்து பர்மிங்ஹாமின் எலிசபெத் மருத்துவமனைக்கு அனுப்பியது. அங்கு அவருக்கு சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் இவரை கொள்ள முயன்ற எசான் என்னும் தீவிரவாதியை பாகிஸ்தான் கைது செய்தது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் எசான் சிறையில் இருந்து தப்பினார். இதற்கு பாகிஸ்தான் அரசு தான் உதவி செய்தது என்றும் கூறினர்.
மீண்டும் கொலை மிரட்டல்:
மேலும் மலாலா தற்போது வரை பாகிஸ்தானிற்கு வரவில்லை. மேலும் அவர் இங்கிலாந்தில் தனது படிப்பை தொடர்ந்தார். மேலும் நோபல் பரிசையும் வென்று அசத்தினார். தற்போது தப்பி ஓடிய எசான் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிர்ச்சியான தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, நீ உன் தாய் மண்ணுக்கு வா, உன்னுடனும் உன் அப்பாவுடனும் முடிக்க வேண்டிய கணக்கு உள்ளது, இந்த முறை தப்பவே முடியாது’ என்று மீண்டும் கொலை மிரட்டலை விடுத்துள்ளார் எசான்.
அதிமுக பொதுக்குழு வழக்கு – மார்ச் 15ல் சிவில் நீதிமன்றம் விசாரணை!!
இதனை தொடர்ந்து எசானின் கணக்கு முடக்கப்பட்டது. மேலும் பாகிஸ்தான் சிறையில் இருந்து எசான் எப்படி தப்பி சென்றார் என்று பாகிஸ்தான் அரசுக்கு மலாலா கேள்வி எழுப்பியுள்ளார். தற்போது எசானின் பதிவுக்கு பலர் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்த செய்தியினால் தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.