மக்கள் நீதி மய்யத்தின் துணைத்தலைவராக பொன்ராஜ் நியமனம் – கமல்ஹாசன் அறிவிப்பு!!

0

மக்கள் நீதி மய்யத்தின் துணைத்தலைவராக பொன்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். பொன்ராஜ் அப்துல்கலாமுக்கு அறிவியல் ஆலோசகராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் நீதி மய்யம்

தமிழகத்தில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர். 2021ம் ஆண்டுக்கான சட்டசபை தேர்தலில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் இணைந்துள்ளது. முன்னதாக தேர்தல் பரப்புரையில் கலந்து கொண்ட மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் வித்தியாசமான தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்துள்ளார். அதில் வீட்டுக்கொரு இலவச மடிக்கணினி மற்றும் வீட்டிலிருக்கும் அனைத்து தாய்மார்களுக்கும் மாத சம்பளம் வழங்கப்படும் என்ற வாக்குறுதிகள் குறிப்பிடத்தக்கது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இணையத்தில் வெளியான கர்நாடக அமைச்சரின் ஆபாச வீடியோ – ரமேஷ் ஜர்கிஹோலி ராஜினாமா!!

இந்நிலையில் தேர்தலுக்கு தயாராகி வரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யத்தின் துணைத்தலைவராக பொன்ராஜ் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். கமல்ஹாசன் முன்பாக கட்சியில் இணைந்துள்ள அவர் அப்துல்கலாமின் அறிவியல் ஆலேசகராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து பொன்ராஜ் கூறும் போது, அப்துல்கலாம் பெயரில் துவங்கிய கட்சியை பதிவு செய்யவிடாமல் தடுத்தது பாஜக அரசு. அப்துல்கலாமின் அறிவியல் சார்ந்த அரசியல் காலத்தின் கட்டாயம். அப்துல்கலாமின் கனவை நனவாக்க தொடர்ந்து முயற்சிப்பேன் என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here