ஐபிஎல் குறித்த சர்ச்சையான கருத்து – வருத்தம் தெரிவித்த ஸ்டெய்ன்!!

0

தென் ஆப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெய்ன் ஐபிஎல் போட்டி குறித்து சர்ச்சையான கருத்தை தெரிவித்தார். இதற்கு பல்வேறு தரப்பினர் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர். தற்போது தனது கருத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ளார் ஸ்டெய்ன்.

ஸ்டெய்ன்:

இந்தியாவில் வைத்து பிரபலமாக நடைபெறும் போட்டி தான் ஐபிஎல். இந்த போட்டி இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த போட்டி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த போட்டிக்காக வீரர்கள் அனைவரையும் ஏலத்தில் விட்டு தான் எடுப்பார்கள். மேலும் சில வீரர்கள் எதிர்பார்ப்பதை விட அதிக விலைக்கு ஏலத்தில் செல்வார்கள். தற்போது இதுகுறித்து தென் ஆப்ரிக்கா அணியின் பந்துவீச்சாளர் ஸ்டெய்ன் சர்ச்சையான கருத்தை தெரிவித்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அவர் ஓர் பேட்டி ஒன்றில் இதனை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, ஐபிஎல் போட்டியில் கிரிக்கெட்டின் தன்மை பின்னுக்கு தள்ளப்படுகிறது. மேலும் பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளில் நடக்கும் லீக் போட்டிகளில் வீரர்களின் கடைசியான ஆட்டத்தை குறித்து தான் பேசுவார்கள். ஆனால் இந்தியாவில் அவர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்ட விலை குறித்து பேசுவார்கள். மேலும் தனக்கு நீண்ட நாள் ஓய்வு தேவைப்பட்டதால் தான் கடந்த வருட ஐபிஎல் போட்டியில் பங்கேற்கவில்லை என்று கூறினார்.

#NZvsAUS டி 20 போட்டி – ஆஸ்திரேலிய அணி அசத்தல் வெற்றி!!

இவரது இந்த கருத்துக்கு இந்திய ரசிகர்கள் பலர் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர். தற்போது இதற்கு வருத்தம் தெரிவிக்கும் வகையில் ஸ்டெய்ன் ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது, ஐபிஎல் போட்டியை மற்ற போட்டிகளுடன் ஒப்பிட்டு தாழ்த்தவோ, அவமானப்படுத்தவோ திட்டமிடவில்லை. நான் கூறிய கருத்து எவரேனுக்கும் வருத்தம் ஏற்பட்டிருந்தால் அதற்கு நான் எனது வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here