மத்திய பிரதேச மாநிலத்தில் ஒரு பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில் யாரும் எதிர்பாராத வகையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி புகை மண்டலமாக காணப்பட்டது.
மத்திய பிரதேசம்:
இந்திய முழுவதும் கொரோனா என்னும் வைரஸ் பரவி மக்களை துன்புறுத்தி வளர்கிறது. சுமார் 1 ஆண்டு காலத்திற்கு அதிகமாக இந்த வைரஸ் நாட்டில் பரவி வருகிறது. இதுபோல் இந்தியாவில் மக்கள் அச்சமடையும் வகையில் பல நிகழ்வுகள் நிகழ்ந்து வருகிறது. அந்த வகையில் தற்போது மத்திய பிரதேசத்தில் ஓர் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று அரங்கேரியுள்ளது. மத்திய பிரதேசத்தில் தாமோ என்னும் பகுதியில் பேருந்து நிலையம் உள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
வழக்கம் போல் அந்த பேருந்து நிலையத்தில் அனைத்து வேலைகளும் நடந்து வந்தது. தற்போது யாரும் எதிர்பாராத வகையில் அந்த பேருந்து நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் மக்கள் அனைவரும் அச்சமடைந்தனர். தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீ அணைப்பு துறையினர் போராடி தீயை அனைத்து வருகின்றனர்.
இந்தியாவில் 50 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு – சுகாதாரத்துறை திடுக்கிடும் தகவல்!!
இந்த தீ விபத்தினால் பேருந்து நிலையத்தில் 7 பேருந்துகள் முற்றிலும் எரிந்து சேதமானது. மேலும் இந்த நிகழ்வினால் அந்த பகுதி புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. தற்போது அந்த பகுதியில் தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டு வருகிறது. பயணிகளின் உயிருக்கு ஏதும் சேதம் விளையவில்லை என்பது போல் தகவல் வெளியாகியள்ளது.