இந்தியாவில் 50 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு – சுகாதாரத்துறை திடுக்கிடும் தகவல்!!

0

இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே வேகம் எடுத்து வந்த கொரோனா தொற்று தற்போது நாள் ஒன்றுக்கு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை பாதித்துள்ளது. இதனால் மக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பு:

இந்தியாவில் மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடந்த சில நாட்களாகவே மறந்து விட்டனர். இதன் காரணமாக இந்தியாவில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை வீசி வருகிறது. தற்போது இதனை தடுக்கும் வகையில் சுகாதாரத்துறை தீவிர தடுப்பு நடவடிக்கைகளை அமல்படுத்தி வருகின்றனர். மேலும் கொரோனா தடுப்பூசி வழங்கும் பணிகளையும் விரைவு படுத்தியுள்ளனர். இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு பற்றிய தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனவால் சுமார் 53,476 பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,17,87,534 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் நாட்டில் 251 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாட்டில் கொரோனவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த்தவர்களின் எண்ணிக்கை 1,60,692 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஒரே நாளில் கொரோனாவில் இருந்து 26,490 பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும் 7 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – அவதியில் மக்கள்!!

இதனால் நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,12,31,650 ஆக அதிகரித்துள்ளது. தற்போது கொரோனவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் 3,95,192 பேர் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். நாட்டில் என்னதான் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அமல்படுத்தினாலும் மற்றும் தடுப்பூசி வழங்குவதை அதிகப்படுத்தினாலும் கொரோனா பரவுவது தொடர்ந்து அதிகரித்து தான் வருகிறது. இதனால் நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் கவலை அடைந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here