மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்க கலை, விளையாட்டு போன்ற பல துறைகளில் சலுகைகளையும் ஒதுக்கீடுகளையும் மத்திய, மாநில அரசுகள் வழங்கி வருகின்றன. இந்நிலையில் மாற்றுத்திறனாளிகள் அணுகக்கூடிய வகையில் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என வைஷ்ணவி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இதற்கான பதிலை தமிழக அரசு விரைவில் அளிக்க வேண்டும் என வழக்கை ஒத்திவைத்தனர். இந்நிலையில் தற்போது தமிழ்நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகள் அணுகக்கூடிய வகையில் 442 தாழ்தள பேருந்துகள் வரும் ஏப்ரல் மாதம் செயல்பாட்டுக்கு வரவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்(10.01.2023) – முழு விவரம் உள்ளே!!
மேலும் சென்னையில் மட்டும் 37.4% பேருந்துகள் மாற்றுத்திறனாளிகளுக்காக இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாழ்தள பேருந்துகள் மாற்றுத்திறனாளிகள் மட்டுமல்லாமல் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களும் பயன்படுத்தலாம் என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.