பிக் பாஸ் மூலம் அறிமுகமான லாஸ்லியா மரியநேசன் அதன்பிறகு பட வாய்ப்புகள் குவிந்ததால் அதில் பிஸியானார். இரண்டிற்கு மேற்பட்ட படவாய்ப்புகளை பெற்றிருக்கும் லாஸ்லியா தற்போது ஒரு சோப்பு விளம்பரத்தில் நடித்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.
லாஸ்லியா:
இலங்கை பெண்ணான லாஸ்லியா செய்தி தொகுப்பாளினியாக பணிபுரிந்தவர். அதன் பிறகு பிக் பாஸ் 3 இல் வாய்ப்பு கிடைத்ததன் மூலம் அதில் கலந்து கொண்டார். ஆரம்பத்தில் இவர் சிறு பிள்ளையாக பிக் பாஸ் வீட்டை வலம் வந்தது அனைவர் மனதையும் கவர்ந்தது.
பிக் பாஸ் வீட்டில் பட்டாம்பூச்சியாகவே இருந்தார் லாஸ்லியா. மேலும் பல ரசிகர்களின் மனதையும் கொள்ளை கொண்டார். ஆரம்பத்தில் அனைவரின் செல்ல பிள்ளையாக இருந்த லாஸ்லியா சில பிரச்சனைகள் காரணமாக சக போட்டியாளர்களிடம் மனக்கசப்பு ஏற்பட்டது.
ஆரம்பத்தில் இவரும் கவினும் நட்பு ரீதியாக பழகினாலும் அது நாளடைவில் காதலாக மாறியது. இதனால் பல சர்ச்சைகளை எதிர்கொண்டார் லாஸ்லியா. மேலும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் அவர்கள் பிரிந்ததாக தகவல்கள் வெளியாகின.
லாஸ்லியாவும் இதனை ட்விட்டரில் மறைமுகமாக தெரிவித்திருந்தார். இது ஒரு புறம் இருக்க லாஸ்லியாவிற்கு தற்போது வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அதாவது ஏற்கனவே அவர் ஹர்பஜன் சிங் உடன் நடித்து வருகிறார். அதன்பிறகு ஆரி உடன் ஒரு படத்தில் கமிட் ஆகியுள்ளார்.
இதனை தொடர்ந்து அவர் ஒரு சோப்பு விளம்பத்தில் நடித்து அது தற்போது வைரலாகி வருகிறது. அந்த விளம்பரத்தில் ஆடையில்லாமல் பாத் டப்பில் சோப்பு போட்டு குளிப்பது போல இருந்தது. இதனால் ரசிகர்கள் ஜொள்ளு விட்டு வருகின்றனர். வீடீயோவை பார்க்க கிளிக் பண்ணுங்க…